இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் சர்வதேச ஊடக அறிவிப்பாளராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
விமல் சொக்கநாதன் மறைவுக்கு பலரும் சமூக ஊடகங்களின் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விமல் சொக்கநாதன் அண்மையில் இலங்கைக்கு விஐயம் செய்து தனது நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
