நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் கட்டுரைப்போட்டி -2023

நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினால் வழமை போன்று நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு எதிர்வரும் 2023.08.15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சைவம், தமிழ், பண்பாடு, கலாச்சார விழுமியங்கள் தொடர்பான யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் காலை 9 மணிக்கு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1.கனிஷ்ட பிரிவு – 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது (100 சொற்கள்)

2.மத்திய பிரிவு – 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது (150 சொற்கள்)

3.மேற் பிரிவு – 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது (250 சொற்கள்) ஆகிய பிரிவுகளாக போட்டி நடைபெறும்.

கட்டுரைகள் யாவும் மதிப்பீட்டுக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று சிறந்த கட்டுரைகளுக்கு பரிசில்களும் ஏனைய 7 சிறந்த கட்டுரைகளுக்கு பாராட்டு சான்றுதழ்களும் வழங்கப்படும்.

போட்டிக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் யாவும் நல்லூர் கந்தசுவாமி கோவில் பூங்காவனத் திருவிழா நிகழும் 15.09.2023 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதினத்தில் வழங்கப்படும்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply