மொராக்கோவில் பேருந்து விபத்து – 24 பேர் உயிரிழப்பு

வட ஆபிரிக்காவின் மொராக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்த சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வளைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொராக்கோ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply