முகநூல் காதலால் சிறுமிக்கு நேர்ந்த கதி!

மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை   நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம்  இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த  மாணவி தற்போது மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவியின் உடலில் 3  வெட்டுக் காயங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தாய் பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில் சிறுமி அவரது பாட்டியுடன் வசித்து வருவதுடன்  தந்தை  வேலைக்காக வேறு பகுதிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டவர் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான  மாணவி முகநூல் ஊடாக குறித்த நபருடன் அறிமுகமாகி சுமார் ஒரு வருட காலமாக காதல் தொடர்பில் இருந்ததாகவும், சிறுமி உறவை நிறுத்தியதால், தான் அவரை தாக்கியதாகவும் குறித்த இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply