8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாப மரணம்!

கொழும்பு, வெள்ளவத்தை, பிரெட்ரிகா வீதிப் பகுதியிலுள்ள 8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய தமிழ் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாடிக்கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவர், சிகிச்சைக்காகக் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply