போலி விசா மூலம் பிரான்ஸ் செல்ல முயன்றவர் கைது!

மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் போலியான வீசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற போது கைது செய்யபட்டுள்ளார்.

குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரையும் அவரிடம் காணப்பட்ட ஆவணங்களையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply