இரண்டாம் தர மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

கொஸ்வத்தை பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர் வகுப்பில் கொடுக்கப்பட்ட வேலையை வீட்டில் செய்யாத காரணத்தினால் வகுப்பு ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கொஸ்வத்தை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாக்கப்பட்ட மாணவனின் முதுகில் பல காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மாணவனிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த ஆசிரியரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply