சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனையில் போட்டி நிகழ்வுகள்!

சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினால், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர் கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனைப் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இன்றும் நாளையும் காலை 10.00 மணிக்கு அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் இடம்பெறும்.
இதில் அட்டாளைச்சேனை இளைஞர் கழகங்களில் இருந்து 3 இளைஞர்  கழகங்களும், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களில் இருந்து 3 இளைஞர் கழகங்களும் பங்குபற்றியுள்ளன.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமது ஷபீர் மற்றும் கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி எப். நஹிஜா முஸாபிர் அவர்களும் கலந்து கொண்டுள்ளதாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.றியாத்  தெரிவித்தார்.
( எம்.எப்.நவாஸ்)

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply