மாடிக் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!

வெள்ளவத்தை காலி வீதியில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்டிடத்தின்  8 ஆவது மாடியில் இருந்து நேற்று மாலை தவறி விழுந்து குறித்த நபர்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கரந்தகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply