அரசியலில் களமிறங்கியுள்ள பிரபல ஊடக நிறுவனத்தின் உரிமையாளர்!!

இலங்கையின் முன்னணி வர்த்தகரான திலித் ஜெயவீர அரசியலில் பிரவேசித்துள்ளார்.

இலங்கையின் பிரதான ஊடக நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான இவர் மௌபிம ஜனதா கட்சியின் மௌபிம ஜனதா கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறித்த கட்சியின் சின்னமாக விமான சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான ஹேமகுமார நாணயக்கார இதற்கு முன்னர் மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக இருந்த நிலையில், தற்போது அவர் கட்சியின் சிரேஷ்ட தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிப் பட்டியலின்படி, விமானம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் மௌபிம ஜனதா கட்சியின் கட்சித் தலைவராக திலித் ஜயவீர பெயரிடப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply