ஆசிரியரை தாக்கிய மாணவன் பொலிஸாரால் கைது!

பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது  தலைக் கவசத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கோறளைப்பற்று  பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையில் பணிபுரியும்  ஆசிரியர் மீதே நேற்றய தினம்  குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலையின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்து வைக்க முற்பட்ட ஆசிரியர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரவு நேர கற்பித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆசிரியரை குறித்த பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் அவரது தந்தை உள்ளிட்ட குழுவினர் தலைக் கவசத்தால் தாக்கியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் தலைப் பகுதியில் பலத்த காயமடைந்த ஆசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயர்தர வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆசிரியரை தாக்கிய குழுவினர் தலைமறைவாகியுள்ளனர்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஏனைய நபர்களை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply