21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்  இலங்கையைச் சேர்ந்த  தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க 2.03.20 நிமிடங்களை எடுத்துக்கொண்டார்.

21 வருடங்களின் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியில்  இலங்கைக்குக் கிடைத்திருக்கும் தங்கப் பதக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply