டெங்கு தாண்டவம் 32 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயால் 32 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 68 ஆயிரம் 497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி மேல் மாகாணத்தில் 32 ஆயிரத்து 862 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மத்திய மாகாணத்தில் 7 ஆயிரத்து 878 பேரும், வடமேல் மாகாணத்தில் 5 ஆயிரத்து 671 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5 ஆயிரத்து 651 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply