இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் தேர்வுக் குழுவை ராஜினாமா செய்யவேண்டும்! விளையாட்டு அமைச்சர் தெரிவிப்பு!

நடந்து வரும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் ODI 33ல் இந்தியாவிடம் 302 ரன்கள் வித்தியாசத்தில் லயன்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு மற்றும் தேர்வுக் குழு தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் அல்லது கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் அன்றாட செயற்பாடுகள் மற்றும் தொழில்சார் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தி, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தைத் தொடர்ந்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தலையீடு மற்றும் இலங்கை கிரிக்கெட் மற்றும் அதன் அதிகாரிகள் மீதான தவறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்ச்சியான கண்டனங்கள் நிர்வாக முன்னேற்றத்தை எதிர்மறையாக பாதிக்கிறது என்றும் சில்வா கூறியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply