உலகக் கோப்பைக்கான இலங்கை அணி மீண்டும் நாடு திரும்பியது!

இலங்கை கிரிக்கெட் அணி 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை பிரச்சாரத்தை ஏமாற்றத்துடன் முடித்துக்கொண்டு இன்று காலை நாடு திரும்பியது.

இந்த குழுவினர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-174 இல், இந்தியாவின் பெங்களூரில் இருந்து கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அதிகாலை 5:50 மணியளவில் வந்தடைந்தனர்.

தேசிய அணியை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் குழுவும் விமான நிலைய வளாகத்திற்கு வந்திருந்தனர்.

தேசிய கிரிக்கட் நிர்வாக சபை தங்களுக்கு பஸ் ஒன்றை தயார் செய்திருந்த போதிலும், பெரும்பாலான அணியினர் விமான நிலைய வளாகத்தை விட்டு தமது தனிப்பட்ட வாகனங்களில் செல்ல தீர்மானித்ததாகவும் இதனிடையே, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை நவம்பர் 19ஆம் திகதி முடிவடைவதுடன் இறுதிப் போட்டியாளர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply