2022 கல்விபொது சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் வெளியானது!

2022(2023) கல்விபொது சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk / www.results.exams.gov.lk எனும் இணையதளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முடிவுகள் மறு ஆய்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,568 மையங்களில் பரீட்சை நடைபெற்றதுடன் மொத்தம் 472,553 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply