ஜனவரியில் மீண்டும் மின் கட்டண திருத்தமா?

எதிர்வரும் 2024 ஜனவரியில் மீண்டும் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய விஜேசேகர, புதிய மின்சார சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது அடுத்த அமர்வு வரை பிற்போடப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி அல்லது 14 ஆம் திகதிகளில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என பல்வேறு தரப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் வலியுறுத்தினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply