வெலிகம துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!

நேற்று இரவு வெலிகம பகுதியில் இரண்டு இனந்தெரியாத ஆசாமிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 42 மற்றும் 52 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, வெலிகமவில் காலி வீதியிலுள்ள மீன் விற்பனை நிலையமொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் தெனிப்பிட்டிய மற்றும் வெலிபிட்டிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், இவர்கள் சிகிச்சைக்கா மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குறித்த மீன் கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply