மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : மரக்கறிகளின் விலை குறைப்பு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை முழுவதும் மரக்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இவ்வாறானதொரு நிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை மரக்கறித் தேவைகளில் எழுபது வீதமானவை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தினால் பூர்த்தி செய்யப்படுகிறது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப மரக்கறிகள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும், மரக்கறிகளின் விலை குறைவினால் நுகர்வோருக்கு பலன் கிடைக்கவில்லை எனவும் தம்புள்ளை பொருளாதார நிலைய வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply