2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தடை!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வகையில் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது டிசம்பர் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சையை இலக்காகக் கொண்டு பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் பிற செயல்பாடுகளை நடத்துவது டிசம்பர் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படும்.

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகி ஜனவரி 31 ஆம் திகதிவரை நடைபெறும்.

இதனிடையே, 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பள்ளித் தவணைக்கான முதல் கட்டம் டிசம்பர் 22 ஆம்திகதி முடிவடைவதுடன், கல்வி அமைச்சின் படி, அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் மூன்றாம் பள்ளி பருவத்தின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 2ஆம் திகதி அன்று ஆரம்பமாக உள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply