கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைக் கைதிகள் சிலருக்கு விடுதலை!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 9 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பிவைத்தனர்.

ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 1004 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply