உயர்தர பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்!

எதிர்வரும் ஜனவரியில் இடம்பெறவுள்ள 2023 க.பொ.த உயர்தர பரீட்சையை முன்னிட்டு விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பரீட்சை நிலையங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சை எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சையை இலக்கு வைத்து கல்வி வகுப்புகளை நடத்துவது எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, பரீட்சையை இலக்காகக் கொண்டு கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் அது தொடர்பான பிற நடவடிக்கைகள் நடத்துவது இடைநிறுத்தப்படும்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply