ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பசில்!

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள அமெரிக்க குடியுரிமையை நீக்கும் நோக்கில் அவர் செயற்படவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பசில் ராஜபக்ச அல்லது நாமல் ராஜபக்ச என அவர் கூறினார்.

எதிர்காலத்தில் இது தொடர்பான இறுதி முடிவினை கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டை அடுத்து தேசிய அமைப்பாளர் பதவி பசில் ராஜபக்சவிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply