செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானம்!

இலங்கையில் முழுமையாக செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி, கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

குறித்த முன்னோடித் திட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply