கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயம்!

கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேரூந்து ஒன்று இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில்  6 பேர் காயமடைந்துள்ளனர்.

துணுக்காய் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் மாங்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற லொறியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் லொறி கவிழ்ந்ததில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். 

பயணிகள் பேருந்தின் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 6 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பயணிகள் பேருந்தின் சாரதி மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply