டயானா கமகேவின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நிறைவடைந்தது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் காமினி அமரசேகர, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேன்முறையீடு விசாரணைக்கு வந்தது.

விசாரணையை நிறைவு செய்த நீதிபதிகள் குழாம், தீர்ப்பை காலவரையின்றி ஒத்திவைத்தனர்.

இராஜாங்க அமைச்சரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரஜாவுரிமைக்கு எதிராக தாம் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட இரண்டு வாரங்களின் பின்னர் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் மேன்முறையீடுகளை முன்வைத்திருந்தார்.

டயானா மற்றும் பலரை தனது மேன்முறையீட்டின் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்ட ஹேரத், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ளதால், இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்று குற்றம் சாட்டி தாம் முன்னர் மனு தாக்கல் செய்ததாக ஹேரத் கூறினார்.

எவ்வாறாயினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட நீதிபதி குழாம் கடந்த அக்டோபர் 31, 2023 அன்று மனுவை தள்ளுபடி செய்தது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply