மின் கட்டண குறைப்பு முன்மொழிவை இலங்கை மின்சார சபை இன்று  சமர்ப்பிக்க உள்ளது!

மின் கட்டணத்தை குறைக்கும் பிரேரணை நாளைய தினத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த கட்டணத் திருத்தத்தின் மூலம் தாம் ஈட்டிய இலாபத்தின் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு அரச மின்சார விநியோக நிறுவனம் உத்தேசித்துள்ளதாக அதன் செய்தி தொடர்பாளர் இன்ஜி நோயல் பிரியந்த தெரிவித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம், இந்த புதிய கட்டண திருத்தத்தில் முற்றாக நீக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply