சஜித்துடன் கை கோர்த்த மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே!

முன்னாள் இராணுவ தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 54 ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, இன்று (2024.02.23) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து, ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இவர் ‘ஊழல் எதிர்ப்பு கொள்கை மற்றும் அமுலாக்கல் பிரிவின் பிரதானியாகவும்’ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊழல் எதிர்ப்புப் பயணத்தின் ஆலோசகராகவும் சஜித் பிரேமதாசவால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று தசாப்த கால யுத்தத்தில் பாரிய பங்களிப்பைச் செய்த இவர், இராணுவத் தளபதியாக பணியாற்றுவதற்கு முன்னர் இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படையின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply