இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வரட்சியான காலநிலையில் இன்று முதல் (2024.02.26) தற்காலிகமாக சிறிய மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு, வடமத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply