முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சாந்தனின் சகோதரர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது அண்ணாவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாத்தியம் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய தாயை பார்க்க வருபவர்கள் இரு தினங்கள் கழித்து வருமாறும் அவர் இதற்கு முன்னர் கோரிக்கையும் விடுத்திருந்தார்.
இதேவேளை, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.