சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு சாவகச்சேரியில் முக்கிய நிகழ்வு!

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் வருடாந்தம் மகளிர் தின விழா மாகாண அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த அடிப்படையில் இவ்வருடம் மார்ச் மாதம் 6ஆம்  திகதி  “அவளையும் உள்வாங்குங்கள்: பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தை துரிதப்படுத்துதல்”  எனும் தொனிப்பொருளில்  சாவகச்சேரி நகர சபை பொன்விழா மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்புடன் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் ஒரு அங்கமாக பெண் தொழில் முயற்சியாளர்களை  ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனைக்கூடமும்  6.3.2024 மற்றும் 7.3.2024 ஆகிய இரு தினங்களும் காலை 8:00 மணி முதல் மாலை 7.30 மணி வரை குறித்த வளாகத்தில் நடைபெற உள்ளது .

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply