குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாய் செய்த செயல் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.
இதன்போது நான்கு கிலோமீற்றர் தூரத்தை தனது மகனுடன் சேர்ந்த ஓடிய தாய், பெற்றோருக்கு முன்னூதாரமாக மாறியுள்ளார்.
குறித்த தாயின் செயலை கண்டு இலங்கை வாழ் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
