31 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 31பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (20.03.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 கடற்றொழிலாளர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு கடற்றொழிலாளர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

பின்னர் யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

You May Also Like

About the Author: Rilak Shana

Leave a Reply