வைத்தியசாலையில் நிரம்பி வழிந்த உடல்கள் – அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் இறந்த உடல்கள் குவிக்கப்பட்டிருந்ததாகவும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனே கைது செய்யப்பட வேண்டும் எனவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றைய தினம் (27.03.2024) இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வுக்கு பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாய் திறக்காமல் இப்போது கருத்து வெளியிடுகின்றார் எனவும் அவர் மீது உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Rilak Shana

Leave a Reply