நீர்கொழும்பு தேவாலயமொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது ஈஸ்டர் ஞாயிறு தின நிகழ்வுகளின் போது இடம்பெற்றுள்ளது.
ஈஸ்டர் ஆராதனைக்கு வந்திருந்த ஒரு குழுவினருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர் தொடர்பில் கடமையிலிருந்த பொலிஸார் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரைகைது செய்துள்ளனர்.