மியான்மாரில் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு!

மியான்மாரில் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதுவர் இதனை ஊடகங்களுக்குத்  தெரிவித்தார்.

குறித்த மீனவர்கள் 2023 டிசம்பரில் நாட்டின் கடல் எல்லையை சட்டவிரோதமாக கடந்ததற்காக மியான்மரில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply