பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!

வாத்துவ, மொல்லிகொட பிரதேசத்தில் இன்று  பிற்பகல் ஏற்பட்ட தகராறில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர் என அடையாளம் காணப்பட்ட காயமடைந்த நபர், தனது மனைவியின் கழுத்தை கண்ணாடி போத்தலால் அறுத்து பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சந்தேக நபரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply