லிட்ரோ நிறுவனத்தினது புதிய எரிவாயு முனையம் கடுவளை பகுதியில் திறந்துவைப்பு!

லிட்ரோ நிறுவனத்தின் புதிய எரிவாயு முனையமொன்று கடுவளை – மாபிம பகுதியில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய எரிவாயு முனையத்திலிருந்து, நாளாந்தம் 60,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள கெரவலப்பிட்டிய எரிவாயு முனையத்தின் ஊடாக நாளாந்தம் ஒரு இலட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.

எனினும், நாட்டின் எரிவாயுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு கெரவலப்பிட்டிய முனையம் மாத்திரம் போதாது என்பதனால், புதிய முனையத்தை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply