இலவசமாக மரக்கறிகள் வழங்கிய தன்சல் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்!

மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் சுமார் 20,000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும் காய்கறி தன்சல் ஒன்று நடைபெற்றமையால் திடீரென குவிந்த பெருந்தொகை மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீகொட பொருளாதார நிலையம் உட்பட பல இடங்களிலுமுள்ள மரக்கறி வியாபார நிலையங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்களின் உரிமையாளரான ஆனந்த விஜேரத்ன என்பவரால் இந்த மரக்கறி தன்சல் வழங்கப்பட்டது.

இலவச மரக்கறிகளை பெறுவதற்காக இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு மக்கள் வீதியோரங்களில் வரிசையில் காத்திருந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட மரக்கறி தன்சல் நேற்றுக் காலை 11 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.

16 வகையான காய்கறிகள் அடங்கிய பொதிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply