ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது !

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய களனி பாலம், சேதவத்த, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) இடம்பெற்ற சுற்றிவளைப்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  குறித்த பெண்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வெல்லம்பிட்டிய குடு ரெஜின என்பதும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பெண் கிரேண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை அவரிடம் இருந்த 7 கிராம் 280 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply