வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு அறிவித்தல் வௌியானது

பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து , மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் மீனவர்கள் மற்றும் கடற்சமூகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அலையின் உயரம் 2.5 – 3.5 மீற்றர் வரை எழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கல்பிட்டி, கொழும்பு, காலி தொடக்கம் மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை கடந்து வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply