ஏரியில் மூழ்கி நபரொருவர் பலி!

பொல்பித்திகம புதிய ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் ஏரிக்கரைக்கு அருகில் உள்ள மரத்தின் கிளைக்கு ஏறி ஏரியில் குதித்த போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கிரிபமுனேகம பொல்பித்திகம பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply