உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள அரசு தயார்- கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

மின்சார கட்டணத்தில் உயர் நீதிமன்றம் சமர்ப்பித்த அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதேச மேற்பார்வைக் குழுவிற்கு நேற்று (04) இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து , இந்த சட்டமூலத்தில் வேறு எந்தத் திருத்தங்களையும் அரசாங்கம் முன்வைக்காது என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply