வௌ்ளத்தில் விளையாட சென்ற மாணவன் பலியான துயரம்!

பத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எட்டவரமுல்ல பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக பத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து சிறுவனை கரைக்கு கொண்டு வந்து பத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனேகம மேற்கு, பத்தேகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் கிங்கங்கை பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வௌ்ளத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக விளையாடிய போது டயர் டியூப் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply