வெற்றியை நிலைநாட்டிய இலங்கை!

ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று குரோசலேட் இல் நடைபெறுகின்றது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்றது.

நெதர்லாந்து அணி சார்பாக மைக்கல் லெவிட் மற்றும் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோர் தலா 31 ஓட்டங்களை எடுத்த நிலையில் பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவன் துஷார் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணி இந்த போட்டியில் 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply