தெஹிவளை மிருகக்காட்சிசாலையினால் புதிய அறிவிப்பு!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலவச சேவையானது இன்று (3) நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் 88 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 220 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலங்கினங்கள் கண்காட்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply