ஹெரோயினுடன் அரச கல்விசாரா ஊழியர் ஒருவர் கைது!

நேற்று (15) மாலை வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதிமலுவ விகாரைக்கு அருகில் 210 கிராம் ஹெரோயினுடன் அரச பாடசாலையின் கல்விசாரா ஊழியர் ஒருவர் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விசாரா ஊழியராக பணிபுரியும் இவர், மிதிகம பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதுடன் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வலையமைப்பை முன்னெடுப்பவர்களால் பெயரிடப்பட்ட நபர்களுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்து வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றப்பிரிவு மற்றும் வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply