இணையத்தில் பொருள்களை வாங்கியோர் கைது!

இணையத்தில் பொருட்களை வாங்கிட கொள்வனவு உத்தரவை மேற்கொண்டுவிட்டு, விற்பனையாளருக்கு பணம் செலுத்த மறுத்த இருவரை வெலிக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து நான்கு கைத்தொலைபேசிகள், இரண்டு மடிக்கணினிகள் மற்றும் ஒரு இணையச் சேவைக்கான ரவுட்டர் என்பனவும், இணைய விற்பனையாளரிடம் இருந்து பெறப்பட்ட தங்க நகைகளும் இரண்டு கைக்கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இணைய விற்பனையாளரின் புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து வாரியபொல மற்றும் சுனந்தபுர பிரதேசங்களில் வசிக்கும் 20 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: digital

Leave a Reply