சேந்தாங்குளத்தில் வாடிகள், படகுகளுக்குத் தீ வைப்பு

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 3 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று இரவு 9 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து, கடற்கரையில் இருந்த மீன் வாடிகள் மற்றும் படகுகளுக்குத் தீ வைக்கப்பட்டது.

அதில் சில வாடிகள் எரிந்த நிலையில், மூன்று படகுகள் தீக்கிரையாகின.

படகுகள் மற்றும் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து ஊரவர்கள் ஒன்று கூடி, தீயை அணைத்ததுடன் சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸாருக்கு அறிவித்தனர்

மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply