அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை முதல் வாக்களிப்பு மும்முரம்!

அம்பாறை மாவட்டத்தில் இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை முதல் 528 வாக்களிப்பு நிலையங்களில்  ஆரம்பமாகியது.

குறிப்பாக கரையோர பிரதேசங்களில் இன்று காலையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கச் சென்றிருந்தனர்.

எனினும் ஏனைய தேர்தல்களைப் போல் வாகனங்களில் படையெடுத்து வாக்களிக்கச் செல்லுதல் என்பது குறைவாகவே காணப்பட்டது.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி, அம்பாறை 1,88,222 பேர், சம்மாந்துறை 99,727 பேர், கல்முனை 82,830 பேர், பொத்துவில் தொகுதியில் 184,653 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இம்மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அதேவேளை இன்று மாலை அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெற சகல ஏற்பாடுகளும் நடைபெற்று முடிந்திருக்கின்றன என்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.

(வி.ரி. சகாதேவராஜா)

You May Also Like

About the Author: digital

Leave a Reply